ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரசியல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இரண்டு கட்சிகளினதும், இணக்கப்பாட்டோடு நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் முன்னெடுப்பதற்கான பொருளாதார வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
அரச வருமானம் அதிகரித்திருந்தாலும், செலவினங்கள் எதிர்பாராத அளவு அதிகரித்திருக்கின்றமை சிக்கலுக்குரியதாகும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியார் மயத்தை எதிர்ப்பதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பொருளாதார வேலைத் திட்டத்தை விரிவான முறையில் அமுல்படுத்த எதிர்பார்க்கின்றது.
அரசாங்கத்தினதும், அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் நாட்டை வலுவான முறையில் முன்னெடுத்துச் செல்வது இதன் நோக்கமாகும்.
இது அரசியல் ரீதியான தீர்மானமன்றி நாட்டுக்கான தீர்மானமாகும் நாட்டின் பொருளாதாரத்தை சரியான திசையில் முன்னெடுப்பது எதிர்பார்ப்பாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.