இரட்டையர்களுள் ஒருவர் அல்லது பரம்பரையில் இரட்டைக் குழந்தை உள்ள ஒருவரை திருமணம் செய்து கொண்டால், இரட்டைக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதை உறுதியாக கூற முடியாது.
ஒட்டியிருக்கும் இரட்டைப் பழங்களை சாப்பிட்டால், இரட்டைக் குழந்தை பிறக்கும் என்னும் கருத்து. ஆனால் வெறும் இரட்டைப் பழங்களை சாப்பிட்டால் மட்டும் இரட்டைக் குழந்தை பிறந்துவிடாது.
பலரும் இரட்டை எண்களில் உடலுறவில் ஈடுபட்டால், இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். இது முற்றிலும் முட்டாள்தனமான ஓர் நம்பிக்கை.
எதைக் கொண்டு இப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. அது என்னவெனில் அன்னாசிப் பழத்தின் மையப் பகுதியை உட்கொண்டால், இரட்டைக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாம்.
மற்றொரு பிரபலமான ஓர் கட்டுக்கதை, உடலுறவு கொள்ளும் நிலை. உடலுறவின் போது ஆண் மேலே இருந்தால், அது இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பை அதிகரிக்குமாம்.