108 கிலோகிராம் எடையுள்ள நடிகை ஒருவர் தொலைக்காட்சித் தொடரொன்றுக்காக மேலும் எடையை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
அஞ்சலி ஆனந்த் எனும் இந்த நடிகை தஹாய் கிலோ பிரேம் எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார். நாளை முதல் ஸ்டார் பிளஸ் அலைவரிசையில் இத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
இத் தொடரில் பருமான ஒரு யுவதியின் பாத்திரத்தில் நடிக்கும் அஞ்சலி ஆனந்திடம் மேலும் எடையை அதிகரித்துக்கொள்ளுமாறு தொலைக்காட்சித் தொடரின் தயாரிப்புக் குழுவினர் கோரினர். எனினும், இக்கோரிக்கையை அஞ்சலி ஆனந்த் நிராகரித்துள்ளார்.
“தற்போது நான் மிகுந்த உடற்செயற்பாடு கொண்ட வாழ்க்கைப் பாணியை பின்பற்றுகிறேன். மலையேறுவதையும் மலைகளில் சைக்கிளோடுவதையும் விரும்பும் ஒருவளாக உள்ள நிலையில் இதற்கு மேலும் எடையை அதிகரிக்க விரும்பவில்லை.
நான் 108 கிலோ எடையுடன் உள்ளேன். இதற்கும் மேலும் எடையை அதிகரித்தால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது கடினம்” என அஞ்சலி ஆனந்த் தெரிவித்துள்ளார். இத் தொடரில் கதாநாயகனாக நடிக்கும் மெஹேர்ஸான் மஸ்டாவும் தனது எடையை 16 கிலோகிராமினால் அதிகரித்துக் கொண்டுள்ளார்.