ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் பண்டிகை தினத்தின் இறுதிநாள் நிகழ்வில் பங்கேற்பதற்காக நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிலையில், இறுதிநாள் நிகழ்வு நேபாள ஜனாதிபதி தலைமையில் நாளை கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, மேற்படி நிகழ்வில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 75 உலக நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் வெசக் தினத்தை இலங்கையில் நடத்துவதற்கு கடந்த 2001ஆம் ஆண்டு அனுமதி கோரப்பட்டிருந்த போதிலும், இம்முறையே முதன்முறையாக நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.