அ.தி.மு.க. கூட்டணி கட்சியான முக்குலத்தோர் புலிப்படையின் தலைவராக இருப்பவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. இவர் அ.தி.மு.க. அம்மா அணிக்கு ஆதரவு தெரிவித்து செயல்பட்டு வருகிறார்.
கடந்த சனிக்கிழமை நடிகர் கருணாஸ் பெங்களூர் சென்று பரப்பன அக்ரகார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்தார். பின்னர் கருணாஸ் கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் பலமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், விரைவில் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று காலை நடிகர் கருணாஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார்.
நேற்று அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்கள்.
இதைத்தொடர்ந்து நடிகர் கருணாஸ் சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.