Loading...
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் தெஹியோவிட்ட மாகம்மன பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
Loading...
விபத்தில் பஸ் சாரதி உட்பட 23 பேர் காயமடைந்த நிலையில்இ கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Loading...