யாழ்.மாநகர சபை முதல்வர்; வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சிரிப்பையே பதிலாக தந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு சிரித்தார்.
யாழ்.மாநகர சபை முதல்வர் வேட்பாளராக , வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களான இ.ஆர்னோல்ட் மற்றும் ஜெயசேகரம், மூத்த ஊடகவியலாளரும் காலைக்கதிர் பத்திரிகை ஆசிரியருமான என்.வித்தியாதரன், மற்றும் சொலமன் சிறில் ஆகிய நால்வர் போட்டியிட உள்ளதாகவும், அதில் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தமிழரசு கட்சிக்குள் இழுபறி ஏற்பட்டு உள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே சுமந்திரன்
சிரித்துக்கொண்டு அந்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்துக்கொண்டார்.