பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 850 பிக்குகளை அலரி மாளிகைக்கு அழைத்து அவர்களுக்கு பணம் வழங்கியது தவறான ஒரு நடவடிக்கை என தேசிய உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் பொங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள நிலையில் இவ்வாறு தேரர்களை அழைத்து அவசரமாக அரசாங்கம் ஏன் நிதி வழங்கியது என்று பொங்கமுவே நாலக்க தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த பிக்குகளுக்கு 40 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளதாக பொங்கமுவே நாலக்க தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிதி முறையற்ற பயன்பாடு அல்லவா? என தெரிவித்துள்ள தேரர்
மக்கள் செல்வாக்கு இல்லாத அரசாங்கம் விகாரைகள் மூலம் மக்களின் நல்லபிப்பிராயத்தைச் சம்பாதிக்க கனவு காண்கின்றது எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.