பொறுப்புடன் கூடிய வினைத்திறனான இணைய ஊடகத்திற்காக தயாரிக்கப்பட்ட ஒழுக்க நெறிக்கோவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே குறித்த ஒழுக்க நெறிக்கோவை கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இணைய ஊடகவியலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இணைய ஊடகத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறித்த ஒழுக்க நெறிக்கோவை தயாரிப்பானது மிகவும் முக்கியமான பணியாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள ஒழுக்க கோவையானது ஊடகத்துறைக்கு மட்டுமன்றி அரசியல் துறைஇ மனித சமூகம் மற்றும் தற்போதைய காலத்திற்குத் தேவையானதொரு பணி எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இணைய ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்றை விரைவில் ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர, அரசாங்க பணிப்பாளர் நாயகம் சுதர்சன குணவர்தன, இணைய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரட்ரி கமகே, செயலாளர் கெலும் சிவந்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.