இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நேற்று ஆரம்பமானது.
இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்படி தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 286 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் ஆரம்பித்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 11 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்களை எடுத்திருந்தது.
அத்துடன் இன்று ஆரம்பமான இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது தென்னாபிரிக்க வீர்ர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி அடுத்து அடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.
பின்னர் இந்திய அணி இன்றைய 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது 4 விக்கெட் இழப்புக்கு 76 ஓட்டங்களை எடுத்திருந்தது.
ஒரு கட்டத்தில் 43.4 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 104 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் அதிரடியாக ஆடிய பாண்டியா 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இறுதியில் இந்திய அணி முதலாவது இனிங்சில் 209 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன் பின்னர் தற்போது தென்னாபிக்க அணி தனது இரண்ணடாது இனிங்சை ஆரம்பித்துள்ளது.
7.03 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி 22 ஓட்டங்களை எடுத்து விக்கெட் இழப்பின்றி துடுப்பெடுத்தாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.