உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மஹிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச நீதிபதிகள் பக்கச்சார்பாகவும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அமையவுமே செயற்படுவார்கள் என தெரிவித்த மஹிந்த சமரசிங்க இது இலங்கைக்கு சாதகமாக அமையாதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ‘எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தமது சார்பில் இந்தக் காரணிகளை நாம் உறுதியாக முன்வைக்க முடியும் எனவும் மஹிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமது நீதிமன்றம் மீதான சுயாதீனத்தை சுட்டிக்காட்டி உறுதியான விவாதத்தை முன்னெடுக்க முடியும் என தெரிவித்த மஹிந்த சமரசிங்க
இன்று தாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் எனவே இவை அனைத்துமே தமக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.