உடல்நிலை பதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருக்கும் கணவரை பார்க்க சசிகலாவிற்கு பரோல் வழங்க பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை மறுப்பு தெரிவித்துவிட்டது.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று கூறியது.
நடராஜனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருப்பதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக நடராஜனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடராஜனை பார்ப்பதற்காக பரோலில் வெளிவர சசிகலா பெங்களூரு சிறைத்துறைக்கு விண்ணப்பித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரரா சிறையில் பிப்ரவரி 15, 2017 முதல் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கடந்த அக்டோபர் மாதத்தில் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட போது அவரை பார்த்துக் கொள்வதற்காக 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் சசிகலா கோரிய பரோலை வழங்க சிறைத்துறை மறுத்துள்ளது. அண்மையில் பரோல் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறையும் பரோல் தர முடியாது என்றும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உயிரிழப்புகள் நேர்ந்தால் மட்டுமே சிறை விடுப்பு தர முடியும் என்றும் சிறைத்துறை கூறிவிட்டதாக கூறப்படுகிறது.