ஒருவர் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதை பரிசோதனையின் மூலம் அறிந்துவிட்டால், அதன் பின் அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனமாக இருக்க வேண்டும்.
அதுவும் இனிமேல் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
அப்படி கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், அதனால் பல்வேறு தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் ஹைப்போ க்ளைசீமியா, இதய நோய், நரம்பு பாதிப்பு மற்றும் பார்வை பிரச்சனைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
சர்க்கரை நோயால் ஒருவர் பாதிக்கப்படும் போது, அவர்கள் மிகுந்த கோபம் அல்லது கவலையால் கஷ்டப்படக்கூடும். இதற்கு சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும், அடிக்கடி இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்த வேண்டும், மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டும் போன்ற விஷயங்கள் தான் காரணம்.
சில சமயங்களில் இரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சரியான மருந்துகள் மற்றும் இன்சுலினை எடுத்த பின்பும், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தே இருக்கும்.
ஒருவரது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால் உணர்த்தும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது
நீங்கள் வழக்கத்திற்கு மாறாக அளவுக்கு அதிகமாக கழிவறைக்கு செல்ல நேரிடுகிறதா? அப்படியானால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்து உள்ளது என்று அர்த்தம்.
எவ்வளவுக்கு எவ்வளவு சிறுநீர் கழிக்கிறோமோ, அவ்வளவு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். அதிலும் ஒருவருக்கு அதிக தாகம் எடுத்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிட்டால், கட்டாயம் அவர்களது இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதென்றே அர்த்தம்.
தொடர்ச்சியான தாகம்
ஒருவரது உடலில் இரத்த சர்ககரை அளவு அதிகமாக இருந்தால், தாகம் அதிகமாக எடுக்கும். அதாவது வழக்கத்திற்கு மாறாக திடீரென்று அளவுக்கு அதிகமாக தண்ணீரைக் குடிக்க ஆரம்பிப்பீர்கள்.
இதற்கு முக்கிய காரணம், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, சிறுநீரகங்களால் சரியாக செயல்பட முடியாமல், அதிகமான அளவில் சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு, இரத்தத்தில் இருந்து க்ளுக்கோஸானது பிரித்து வெளியேற்ற முடியாமல் போகும்.
இந்நிலையில் உடல் வறட்சி ஏற்பட்டு, அளவுக்கு அதிகமாக தாகமும் எடுக்க ஆரம்பிக்கும். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும்.
காயங்கள் தாமதமாக குணமாவது
உங்களுக்கு திடீரென்று சிறு காயங்கள் ஏற்பட்டு, அந்த காயங்கள் விரைவில் குணமாகாமல் இருந்தால், உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.
சில சமயங்களில் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால், அதனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, இரத்த ஓட்டத்திலும் தடை ஏற்படும்.
சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டு, அது குணமாவதற்கு தாமதமானால், அவ்விடத்தில் தொற்றுக்களின் தாக்கம் அதிகரித்து, நிலைமை இன்னும் மோசமாகும் வாய்ப்புள்ளது. எனவே இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
வாயில் பிரச்சனைகள்
நீங்கள் நல்ல வாய் சுகாதாரத்தைப் பராமரித்தும், உங்கள் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், உடனே இரத்த சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
ஏனெனில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், பல்வேறு வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
ஏனெனில் உயர் இரத்த சர்க்கரை அளவானது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி, தொற்றுக்களை பெரிதாக்கும்.
எப்போது ஒருவர் பற்களைத் துலக்கும் போது ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுகிறதோ, அப்போது உடனே மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.
குறிப்பு
நமது உடலில் இருக்கும் சிறுநீரகப் பையில் 400 மி.லி. அளவு வரை மட்டுமே சிறுநீரை தேக்கி வைக்க முடியும்.
எனவே அந்த அளவுக்கு மேல் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்து விட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் உள்ள அனைவருக்குமே தோன்றும், இவ்வாறு தோன்றும் உணர்வுகள் இயல்பானது.
ஆனால், சிலருக்கு 400 மி.லி அளவை விட குறைவாக தேங்கி இருக்கும் போதே சிறுநீர் வருவது போன்ற உணர்வுகள் தோன்றும்.