பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்திய 10 பயங்கரவாதிகளுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
முகமது இஸ்டாக், முகமது ரபீக், முகமது ஆரிஷ், ஹபிபுர் ரகுமான், முகமது பயஸ், இஸ்மாயில் ஷா, முகமது பசல், ஹஸ்ரத் அலி, முகமது ஆசிம் மற்றும் ஹபிபுல்லா ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயங்கரவாதிகள் அங்கு 62 பேரை கொன்று குவித்தவர்கள் என அந்த நாட்டின் ராணுவ ஊடகப்பிரிவு கூறுகின்றது. குறிப்பாக முகமது இஸ்டாக்கும் முகமது ஆசிமும் சேர்ந்து பாகிஸ்தானின் சுபி மத இசைக்கலைஞரான அம்ஜத் சப்ரியையும் சட்ட அமலாக்கல் பிரிவினரையும் கொன்றவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா உறுதி செய்துள்ளார்.
எனவே 10 பயங்கரவாதிகளும் எந்த நேரத்திலும் தூக்கில் போடப்படலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.