கிழக்கில் பச்சைமிளகாயின் விலை என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளதால் ஈடுசெய்முடியாத நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 20 ரூபாவாக காணப்படுகின்றது. இவ் விலை தொடரச்சியாக இருந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதவது ஒரு கிலோ பச்சைமிளகாயை பறிப்பதற்கு கூலியாக 15 ரூபா கொடுக்கவேண்டியுள்ளதாகவும் தங்களுக்கு ஒரு கிலோ பச்சைமிளகாய் விற்றால் பறிப்பவர்களைவிடவும் குறைவான தொகையான 5 ரூபாவே இலாபமாக கிடைப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருட இறுதி மாதத்தில் ஒரு கிலோ பச்சைமிளகாயின் மொத்தவிலை 780 ரூபா தொடக்கம் 880 ரூபா வரை உயர்ச்சியடைந்து காணப்பட்டிருந்தது.
சாதாரணமாக இம்மாதத்திலே ஒரு கிலோ பச்சைமிளகாயின் விலை 250 ரூபா தொடக்கம் 280 ரூபா வரை செல்வது வழமையாக இருந்து வந்தது, ஆனால் இந் நிலை தற்போது தலைகீழாக மாறி பச்சைமிளகாயின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது