Loading...
பதுளை கந்தகெட்டி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இரு மாணவ குழுக்களுக்கிடையில் கட்நத சில தினங்களாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Loading...
14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மாணவர் மீகஹகிவுல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...